பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்த ராஜேந்திர பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக அரசு வழங்கும் பரிசுப்பொருட்கள் தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் 100 மில்லி ஆவின் நெய் வழங்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், அதிமுக கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டால்தான் அங்கம் வகிக்க முடியும் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.







