தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு 10,750 கிலோ கெட்டுப்போன மீன்களை கடத்த முயற்சி

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 10,750 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக – கேரள எல்லையான தென்காசி…

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 10,750 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக – கேரள எல்லையான தென்காசி மாவட்ட எல்லை அருகே உள்ள கேரள மாநில ஆரியங்காவு சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் வழக்கம்போல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் சோதனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து மீன்கள் கொண்டு செல்லப்பட்ட லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் 3 லாரிகளில் 10,750 கிலோ கெட்டுப்போன மீன்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த மீன்கள் தமிழகத்தின் கடலூரில் இருந்து கருநாகப்பள்ளி, ஆலங்கோடு ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.