அசாம் மாநில பாஜக மூத்த தலைவர் ராஜேன் கோஹைன் அசாம் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தலைவர் பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேன் கோஹைன், நாகோன் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து நான்குமுறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் உருவாக்கப்பட்ட காசிரங்கா மக்களவைத் தொகுதியில் நாகோன் மக்களவைத் தொகுதியின் சில பகுதிகள் சேர்க்கப்படுவதற்கு வழிவகுத்த சமீபத்திய எல்லை நிர்ணய நடைமுறை குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கோஹைன் தொகுதி மறுசீரமைபுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அசாம் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார். எதிர்காலத்தில் அந்த இடத்தில் இருந்து கட்சி வெற்றி பெறுவது சாத்தியமற்றது என்றும் கோஹைன் கூறியுள்ளார்.
இந்த முடிவை எடுத்த பிறகு, ரயில்வே துறை முன்னாள் அமைச்சர், தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் “எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லை என்றார்.
சமீபத்திய தொகுதி மறுசீரமைப்பு நிர்ணய செயல்முறை நாகோன் மக்களவைத் தொகுதியை “எதிர்காலத்தில் பாஜக வேட்பாளர்களால் வெல்ல முடியாததாக மாற்றியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.