ஆசியக் கோப்பை – அரைசதம் விளாசிய சஞ்சு ; ஓமனுக்கு 189 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் முதலில் களமிரங்கிய இந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது அபுதாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன.

போட்டியின் முன் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்த இந்தியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா சார்பில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் (56) அரை சதம் விளாசினார். மேலும் அபிஷாக் ஷர்மா 38 ரன்கள்,  அக்சர் படேல் 26 ரன்கள், திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது . தொடர்ந்து 189 ரன்கள் இலக்குடன் ஓமன் அணி விளையாட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.