போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இன்று ஆஜரானார்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அக்.3ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப் பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலை யில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அவர்கள் ஜாமீன் மனு 2 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவர் நண்பர்கள் 2 பேருக்கு மும்பை உயர்நீதி மன்றம், நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத் தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் கூடாது என்றும் நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னரே வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
அதன்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஆர்யன் கான் தனது வழக்கறிஞர் நிகில் மானேஷிண்டேவுடன் இன்று வந்தார். பின்னர் அங்கு ஆஜராகி கையெழுத்திட்டார்.