அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து அமெரிக்க செனட் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து நாடாளுமன்ற செனட் குழு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. செனட் குழுவினரான, ஜெஃப் மெர்க்லி, பில் ஹேகர்டி, டிம் கெய்ன் மற்றும் கிறிஸ் வான் ஹோலன் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர்.









