ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 500 கோடி ரூபாய் துபாயில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் செய்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் பதுங்கியுள்ள அதன் இயக்குநர்களை கைது செய்ய இன்டர்போல் உதவியுடன் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 500 கோடி ரூபாய் துபாயில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சொத்துக்களை முடக்க துபாய் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
சொத்துக்களை முடக்க துபாய் நாட்டு அரசுடன் எம் லாட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடிதம். இதுவரை மோசடி செய்யப்பட்ட பணத்தில் வாங்கிய பல கோடி மதிப்பிலான 127 சொத்துக்களை கண்டறிந்து, 60 சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
102 கோடி வங்கி கணக்கை முடக்கி, 6.5 கோடி பணம், 6கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இண்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கி உள்ள இயக்குனர்களை பிடிக்க தீவிரம்.
நடிகர் ஆர்.கே சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் அறிவுறுத்தல். ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் 2438 கோடி ரூபாய் செய்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.