தமிழகத்தில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது இல்லை எனவும்
தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், கடந்த ஆட்சி காலத்தைக் காட்டிலும் தற்போது பால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் 26 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை, தற்போது 28 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு இன்னும் 46 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. வாணிபம் செய்யும் நபர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த விலையும் மற்ற தனியார் கம்பெனிகளை காட்டிலும் 10 ரூபாய் குறைவாகவே ஆவினில் விற்பனை செய்யப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் குறைந்து இருப்பதாக வெளியாகும் கருத்து தவறானது. பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப பால் விநியோகம் செய்யப்படும். ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது இல்லை எனவும்
தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதுதவறான முறையில் SNF கார்டுகள் பயன்படுத்திய 40ஆயிரம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து கார்டுகளையும் ரேஷன் அட்டைகளுடன் இணைக்கும் பணி துவங்கும்.
ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அரசு மானியம் தருகின்ற நிலையில் அதில் நடக்கும் தவறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமுல், நந்தினி போன்ற பால் விற்பனை ஆக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.