செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தது சிவசங்கர் தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அரியலூர்
மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது . இதில் பங்கேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
” 2014 -ல் போக்குவரத்து துறைஅமைச்சராக செந்தில் பாலாஜி இருந்துள்ளார். கண்டக்டர் டிரைவர் பணிகளுக்கு பணம் பெற்று கொண்டு போஸ்டிங் போடுவதாக குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. 2018 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2019-ல சார்ஜ் சீட் போடப்பட்டுள்ளது.
அதன் பிறகு செந்தில் பாலாஜி திமுகவுக்கு செல்கிறார். திமுக ஆட்சி வந்ததும் செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார் வாபஸ் பெறப்படுகிறது. வேலைக்காக கொடுத்த பணம் 2019ஆம் ஆண்டு திரும்ப வந்துவிட்டதாகவும் அதனால் வழக்கை திரும்ப பெறுகிறோம் என நீதிமன்றத்தில் ஆஜரான 14 பேர் தெரிவிக்கின்றனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இரு மாதங்களில் முழு விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறது. முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதால் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தவுடன் அவருக்கு ஸ்டாலின் வைத்த பெயர் மகாதமாகாந்தி.
திராவிடல் மாடல் என்றாலே பேச்சு தான். பேச்சு மட்டும்தான். திமுக என்றாலே அனைவரும் ஊழல்வாதிகள். இவர்கள் எப்படி டாஸ்மாக்கை மூடுவார்கள் .செந்தில் பாலாஜியின் கைது திமுகவினர் இடையே நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்கிங் போன செந்தில் பாலாஜிக்கு திடீரென ஹார்ட் அட்டாக் என சொல்கின்றனர். இதுவும் ஒரு திராவிடர் மாடல்தான்.
மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியை பார்க்க சென்ற அமைச்சர்கள், அடிச்சு கேட்டாலும் என் பெயரை சொல்லி விடாதே என்று சொல்லத்தான் சென்றுள்ளனர்.செந்தில் பாலாஜி ஒரு சகலாலா வல்லவன். இதுவரை 5 கட்சிகள் மாறியுள்ளார்.
அடுத்தது அமைச்சர் சிவசங்கர் தான்…. செந்தில் பாலாஜியின் சிஷ்யன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் டிரான்ஸ்பர் போட ரூ.12 கோடி வரை சுருட்டியுள்ளார். அடுத்தது அவர் மீது நடவடிக்கை பாயும்.
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.