சமீபத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றெடுத்த கோப்பையை ஆந்திரா முதல்வர் ஆசீர்வதித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டி சென்றது. அந்த கோப்பைக்குத் திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பூஜைகள் நடந்தது.
இதனை தொடர்ந்து கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மகள் ரூபா குருநாத், சென்னை சூப்பர் அணியின் ஆட்டக்காரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு ஆகியோர் விஜயவாடா சமீபத்தில் தாடே பள்ளியிலுள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்யை சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது முதல்வர் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு
வாழ்த்துக்களையும், ஆசியையும் வழங்கினார். அதன் பின் அம்பத்தி ராயுடுவின் ஆலோசனைப்படி ஆந்திராவில் பெரிய விளையாட்டு மைதானமும், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகள் அமைக்க மாநில் அரசு ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.