ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் சசிகலாவை அவதூராக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்தோஷ் தலைமையில் அமமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.







