சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாயோன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் பேசியதாவது:
மாயோன் ஆரியர் வருகைக்கு பிறகு கண்ணன், கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ண பரமாத்மாவாக மாறிப் போனார். பண்பாட்டு புரட்சியை மக்களிடம் கொண்டு செல்ல பொருளாதார சுமை பெரும் சுமையாக நாம் தமிழர் கட்சிக்கு இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசு விழாக்களாக இவற்றை மாற்ற வேண்டும். இந்து மதம் எங்கள் மேல் திணிக்கப்பட்ட மதம். ஆனால் நாங்கள் சைவர்கள். அதிலும் நாங்கள் வீர சைவர்கள். இந்து மதத்திற்கு வெள்ளை அடிக்கும் வேலையை நாங்கள் செய்யப்போவதில்லை.
அரசை ஆள்பவரே நாங்கள் 90% இந்துக்கள் என்கிறார். பிறகு எப்படி பண்பாட்டு மீட்சி நடக்கும். மின் துறை மட்டுமல்ல எல்லா துறையையும் வித்தாச்சு. நாட்டை விற்றுவிட்டு மக்களுக்கு கொடியை மட்டும் கொடுத்து அசைக்க சொல்கிறார்கள். அந்த கொடியையும் அம்பானி தான் விற்கிறார்.
எதெல்லாம் ஆக்கிமிப்பு?
வெறும் காவடி அல்ல பால் காவடி பன்னீர் காவடி என அனைத்தையும் ஸ்டாலின் தூக்குகிறார். 70 ஆண்டுகள் வாழ்ந்தவனை ஆக்கிரமிப்பு என்று சொல்ல அரசுக்கு வெட்கமா இல்லையா? பல நீதிமன்றங்களே இன்று ஆக்கிரமிப்பில் தான் கட்டப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகமும், சாஸ்திரா பல்கலைக்கழகமும் ஆக்கிரமிப்பு இல்லையா? 2024 இல் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடுகிறது. 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள்.
ஊழல் லஞ்சத்தை ஒழிக்க தனித்து தான் நிற்க வேண்டும். 1% இல் இருந்து 7% ஆக உயர உழைத்து தான் வந்துள்ளோம். நாம் தமிழர் கட்சி எப்போது ஆட்சிக்கு வரும் என்ற கேள்விக்கு நல்ல குறிகாரரை கேட்டு சொல்கிறேன்.
எந்த கல்லூரியிலும் மாணவர்களை அரசியல் பேச விடுவதில்லை. அரசியல் களத்திற்கு மாணவர்கள் வரக்கூடாது என்ற நிர்பந்தத்தை உருவாக்குவதே ஆட்சியாளர்கள் தான்.
நாட்டையும் மொத்தமாக அதானி அம்பானிக்கு கொடுத்து விட்டால். ஓட்டுப் போடும் செலவாவது மிச்சமாகும் என்றார் சீமான்.