உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் வெளியாவதற்கு முன்பே அவர் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலைக்கு சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பயணத்தின் போது ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் ஆகியோரையும் ரஜினி சந்தித்தார். உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்த்துள்ளார். பின்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார்
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை அவரது லக்னோ இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு விழாவில் சந்தித்தேன். அப்போது முதல் நாங்கள் நல்ல நண்பர்களாக உள்ளோம். நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் படப்பிடிப்புக்காக லக்னோ வந்தபோது அவரைச் சந்திக்க முடியவில்லை, தற்போது அவர் இங்கே இருக்கிறார் அதனால் அவரைச் சந்தித்தேன் என தெரிவித்தார்.
இதேபோல் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து அகிலேஷ் யாதவ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மைசூரில் என்ஜினீயரிங் படிக்கும் போது, ரஜினிகாந்த் ஜியை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.