பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் படைப்பு ஒன்றும் தேர்வாகியுள்ளது.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 77 வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2024’ மே 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : பெண் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சொமேட்டோ சிஇஓ!
140 நாடுகளிலிருந்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இன்னபிற திரைப்பட ஆளுமைகள் பங்கெடுக்கும் மாபெரும் நிகழ்வில் ‘லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ் (Let’s Spook Cannes)’ என்கிற தலைப்பின் கீழ் ஒரு தமிழ் படைப்பு தேர்வாகி இருக்கிறது.
இந்நிகழ்வின் நோக்கம் கேமிங் மற்றும் திரைப்படத் தயாரிப்பிற்கு உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து பரிந்துரைக்கப்படும் பல்வேறு வீடியோ கேம்களில் சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்து காட்சிப்படுத்துவது. இந்திய சினிமா மற்றும் கேமிங் இரண்டையும் இணைக்கும் வகையில் புதுபடைப்பாக, ‘இருவம்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதுதான், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் ‘லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்’ நிகழ்வுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த திரைப்பட விழாவில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்பட உள்ளன. இந்தியாவில் இருந்து படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி உள்ளிட்டோர் பங்கேற்று அலங்க உள்ளனர்.