நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும்
வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை எதிர்கட்சியினர் சீர் குலைக்க முயற்சி செய்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையை கட்டவிழ்த்துவிட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் நூற்றுக்கும் மேற்பட்டோரை வரவழைக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என திமுகவினருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறினார்.