எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல் தற்போது எடப்பாடி
பழனிச்சாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டு அதிமுக எழுந்து நிற்பதாக முன்னாள்
உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் மாற்று கட்சியினர்
நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில்
அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் அதிமுகவின் செயல்பாடுகள்
செம்மைப் படுத்தப்பட்டு வருவதாகவும் கடந்த நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள்
எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக பணியாற்றியதாக மக்களும் தொண்டர்களும்
சொல்கின்றனர் என கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
எடப்பாடி பழனிச்சாமி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிமுக இன்று
எழுச்சிமிக்க இயக்கமாக இருக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல் ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டு அதிமுக எழுந்து நிற்கிறது.
அதிமுகவில் யாரும் தன்னைத்தானே தலைவர்கள் என கூறிக் கொள்வதில்லை ஒட்டுமொத்த மக்களாளும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் எம்ஜிஆர். உலக தமிழர்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் ஜெயலலிதா. அதிமுகவில் எனக்குப் பிறகு வரப்போகும் தலைவர் யார் என்பதை மக்களும் தொண்டர்களும் தான் முடிவு செய்வார்கள் என ஜெயலலிதா அன்று தெரிவித்த கருத்து இன்று அதிமுகவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்த மக்களாலும் இயக்கத்தின் நிருவாகிகளாலும்
போற்றப்படும் தலைவராக உருவாகி வருகிறார். ஜெயலலிதா காவிரி உரிமையை மீட்டுத் தந்தது போல் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் என்று காமராஜ் தெரிவித்தார்.