கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள மனந்தவாடி எனும் பகுதியில் கடந்த வாரத்தில் பன்றிகள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள மாநிலம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறுகையில், பன்றிகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பன்றிக் காய்ச்சலானது மனிதர்களுக்குப் பரவும் அபாயம் இல்லை. இருப்பினும் பன்றிகளிடம் இருந்து மற்ற விலங்குகளுக்கு வேகமாகப் பரவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா