நடிகர் விஜய் உட்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை கவுரவித்தார். அது வெறும் கல்வி விருது விழா மட்டும் அல்ல விஜய்யின் அரசியல் வருகையை அறிவிக்கும் விழா என்றே ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து திரையுலகினரும், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் அண்ணா சாலையில் உள்ள ஜிம் கானா கிளப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தாவது:
காமராஜர் ஐயா அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததில் பெருமை
அடைகிறேன், எங்களுடைய இலக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் நோக்கிய உள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவு எடுக்கப்படவில்லை.
மக்கள் அறிவு ஆற்றல் உள்ளவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,
ஜனநாயகம் ஜெயிக்க வேண்டும் என்றால் தேர்தலுக்கு நாம் பணம் கொடுக்கக் கூடாது
பணம் வாங்க கூடாது, மக்கள் எங்களை திரும்பிப் பார்க்கும் காலம் வரும்.
மதுரையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வை நாங்கள் தான் ஆரம்பித்தோம். போதை
அதிகமாக ஊடுருவி விட்டது, பூரண மதுவிலக்கு வேண்டும் என்று மதுரையில் நடந்த
பிரம்மாண்டம் பொது குழுவில் அறிவித்திருந்தோம்.
மக்களுக்கு எது தேவைப்படுகிறது அதுதான் அரசியல் என்று நினைப்பவன் நான். அந்தப்
பாதை சிறப்பாக இருக்கும் என்று அதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவன் நான்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பொற்கால ஆட்சி தந்தவர், இந்தியாவிற்கே
முன்னோடியாக திகழ்ந்தவர் என நேருவே இவரை புகழ்ந்துள்ளார். அப்படிப்பட்ட அவர்
கட்டிய அணைகள் திட்டங்கள் ஏராளம்.அவரைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அது தவறு இல்லை, அவருடைய திட்டங்களை பின்பற்றுவதும் தவறு இல்லை என்றார்.
நான் முதலமைச்சராக வேண்டும் என்பதை விட எங்கள் இயக்கத்தை சார்ந்த யாராவது
ஒருவர் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களின் கருத்து. நல்லவர்கள்
வல்லவர்கள் அறிவியல் ஆற்றல் உள்ளவர்கள் ஆட்சி புரிய வேண்டும் என்று பேசினார்.
இதனையடுத்து விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளித்தாவது:
விஜய் மட்டுமல்ல, மருத்துவர், இன்ஜினியர் என பொதுமக்கள் அனைவருமே
அரசியலுக்கு வரலாம். நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை தனித்து தான்
போட்டியிடுவோம் என்றார்.இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.