நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சினிமாத் துறையில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு கடின உழைப்பும் விடா முயற்சியும் தேவை. அப்படி தனது விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் 30 ஆண்டுளை நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய். அவரது வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. நாளைய தீர்ப்பு தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் அடுத்த வாரிசு விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1992 இல் நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியாகும் போது எஸ்.ஏ.சந்திரசேகர் கூட நினைத்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி ஒவ்வொருவரையும் மலைக்க வைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் விஜய் சந்தித்த அவமானங்கள் சிறிதல்ல.
100 கோடி வசூல் சாதனை, 200 கோடி வசூல் சாதனை என தமிழ் சினிமாவை இன்று உலகமே திரும்பி பார்க்கிறது என்றால் அதற்கு பின்னால் விஜய்யின் படங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. சினிமாவில் மட்டும் மக்களுக்கு நல்லது செய்யாமல் தனிப்பட்ட முறையிலும் விஜய் தன்னால் முடிந்த உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் மூலமாக செய்து வருகிறார். அதனால் தான் ரசிகர்கள் அவரை தளபதி என்று அன்போடு அழைக்கின்றனர்.
குறிப்பாக கொரோனா காரணமாக பல திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் வருவார்களா என்ற எதிர்பார்த்ததை உடைத்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். இப்படி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து உச்சத்தை தொட்டு சாதனை படைத்து வருகிறது விஜய்யின் திரைப்படங்கள்.
காதல், ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட் என 30 ஆண்டுகளாக நம்மை ரசிக்க வைத்த நடிகர் விஜய் தொடர்ந்து திரைத்துறையில் உச்சத்தை தொட வேண்டும் என நியூஸ் 7 தமிழ் சார்பில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
– தினேஷ் உதய்