#Indonesia-வில் வெடித்து சிதறிய எரிமலை!

 இந்தோனேசியாவில் உள்ள எரிமலை வெடித்து சிதறிய நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியா பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிா்வுக் கோடுகளில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு அவ்வப்போது உள்ளாகிறது. இந்தோனேசியாவில்…

 இந்தோனேசியாவில் உள்ள எரிமலை வெடித்து சிதறிய நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்தோனேசியா பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிா்வுக் கோடுகளில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு அவ்வப்போது உள்ளாகிறது. இந்தோனேசியாவில் சுமார் 28.2 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

இதையும் படியுங்கள் : #TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்த நிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.