29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம்! பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் பவன் கல்யாண்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா  என்ற கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் இணைந்து பாஜக கூட்டணியில் போட்டியிட்டார். இதற்கிடையே, ஊழல் வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட  ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுயை சிறையில் நேரில் சந்தித்து பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பவன் கல்யாண் பேசியதாவது:

“தெலுங்கு தேசம் வலுவான கட்சி. ஆந்திரத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த ஆட்சிக்கும் தெலுங்கு தேசம் தேவைப்படுகிறது. இன்று தெலுங்கு தேசம் இக்கட்டான சூழலில் உள்ளது. நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இந்த சூழலில் ஜனசேனா இளைஞர்களின் ஆதரவு தெலுங்கு தேசத்துக்கு தேவைப்படுகிறது. தெலுங்கு தேசமும், ஜனசேனாவும் இணைந்தால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மூழ்கிவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், ஆந்திரத்தில் ஓரளவு மக்கள் வரவேற்புள்ள ஜனசேனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading