கிராமத்தில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைப்பாடி பழங்குடியினர் கிராமத்தில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். யானைப்பாடி கிராமத்தில் மலைப்பாம்பு புகுந்ததை கண்ட பழங்குடியின மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் புதர் ஒன்றில் சுருண்டு படுத்திருந்த மலைப்பாம்பை மீட்டு எடுத்துச் சென்று மசினகுடியின் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.







