நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி | தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் கனமழை!

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து பெங்கல் புயலாக உருவாக்கக்கூடும். இதன் காரணமாக வருகிற 25-ம் தேதி முதல்…

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வலுவடைந்து பெங்கல் புயலாக உருவாக்கக்கூடும். இதன் காரணமாக வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக கனமழை கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அரசு அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.