மெக்சிகோ நகருக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற தியோதிஹூகான் தொல்பொருள் தளத்தில் பறந்து கொண்டிருந்த வெப்பக் காற்று பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் இரண்டு பேர் இறந்தனர்.
“பயணிகள் பலூனில் இருந்து குதித்தனர்,” என்று மெக்சிகோ மாநில அரசு ஒரு அறிக்கையில், பலியானவர்கள் 39 வயது பெண் மற்றும் 50 வயது ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் முகத்தில் இரண்டாம் நிலை தீக்காயங்கள் மற்றும் வலது தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக அது கூறியது.பலூனில் வேறு பயணிகள் யாரும் இருந்தார்களா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
https://twitter.com/Lerpc75/status/1642228555026186243?s=20
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ பலூனின் கோண்டோலா தீப்பிடித்ததைக் காட்டுகிறது. பல டூர் ஆபரேட்டர்கள் மெக்சிகோ நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 45 மைல்கள் (70 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள தியோதிஹுவாகன் மீது சுமார் $150க்கு பலூன் விமானங்களை வழங்குகிறார்கள்.
சூரியன், சந்திரனின் பிரமிடுகள் மற்றும் அதன் அவென்யூ ஆஃப் தி டெட் ஆகியவற்றுடன், தியோதிஹுவான் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இது கொலம்பியன் காலத்திற்க்கும் முந்தைய காலத்தின் எஞ்சியிருக்கும் நினைவுச்சின்னமாகும்.







