கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா பகுதியில் பாம்பு கடித்த தாயின் உயிரை துணிச்சலுடன் கல்லூரி மாணவி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
ஷ்ரம்யா புத்தூரில் உள்ள விவேகானந்தா டிகிரி கல்லூரியில் படிக்கிறார். அவரது தாயார் மம்தா ராய் கேயூர் கிராம பஞ்சாயத்தில் பணியாற்றுகிறார். மம்தா புத்தூரில் உள்ள தனது தாயாரின் பண்ணைக்கு சென்று திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக மலபார் குழி என அழைக்கப்படும் நாகப்பாம்பு மீது தடுமாறி விழுந்துள்ளார். அதன்பின், பாம்பு அவரது காலில் கடித்துள்ளது. மம்தாவின் மகள் ஷ்ரம்யா, விஷம் பரவுவதைத் தடுக்க தனது தாயின் காலில் இருந்து விஷத்தை உருஞ்சி வெளியே எடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனை ஊழியர்களின் கூற்றுப்படி, ஷ்ரம்யாவின் இந்த செயலே மம்தாவின் உயிரைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளனர். தனது கல்லூரியில் சாரணர் மற்றும் வழிகாட்டி ரேஞ்சராகவும் பணியாற்றும் ஷ்ரம்யா, பாம்பு கடித்ததில் இருந்து தனது தாயை மீட்டதற்காக பாராட்டுகளை பொற்று வருகிறார். விஷத்தை வெளியேற்றும் இந்த முறை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி நான் கேள்விப்பட்டதாகவும், படங்களில் பார்த்ததாகவும் ஷ்ரம்யா கூறினார்.
பல நாடுகளில், பாம்புக்கடி ஒரு தீவிர பொது சுகாதார பிரச்சினை. ஒரு நாள் மருத்துவமனையில் இருந்தபோது, மம்தாவுக்கு அனைத்து தெளிவுகளும் வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மம்தா ராயை மலபார் குழி கடித்தது.