நீலகிரியில் வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை – அதிர்ச்சித் தரும் சிசிடிவி காட்சி!

நீலகிரி மாவட்டம்,  பந்தலூர் பகுதியில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி செல்லும் சிசிடிவி கேமரா பதிவு இணையத்தில் வைரலாகி குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது. பந்துலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு…

நீலகிரி மாவட்டம்,  பந்தலூர் பகுதியில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி
செல்லும் சிசிடிவி கேமரா பதிவு இணையத்தில் வைரலாகி குடியிருப்பு வாசிகளை
அச்சமடைய செய்துள்ளது.

பந்துலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு காட்டு யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  மேலும் பந்துலூர் இந்திரா நகர்‌,  எம்.ஜி.ஆர் நகர்,  நத்தம்,  ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதியில் சமீப காலமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி சென்றுள்ளது.

இதையும் படியுங்கள்: சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜப்பான் இசை வெளியீட்டு விழா – முக்கிய நடிகர்களை அழைக்க ஏற்பாடு!

மேலும் நத்தம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் நுழைந்த
சிறுத்தை வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாடி வாயில் இழுத்து
சென்றுள்ளது. இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி
கேமராவில் பதிவான நிலையில், இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி
குடியிருப்புவாசிகளை அச்சமடைய செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.