இமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இது நாட்டின் அதிவேக ரயிலாக உள்ளது. இது சுமார் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வந்தே பாரத்தின் 3வது ரயில் சேவை குஜராத் மாநிலம், காந்தி நகருக்கும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கும் இடையில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் 4வது ரயில் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது இமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி இடையே இயக்கப்படுகிறது. நாட்டின் 4வது வந்தே பாரத் எக்பிரஸ் ரயிலை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இமாச்சல பிரதேசம் மற்றும் உனாவுக்கு தீபாவளி பண்டிகை முன்னரே வந்து விட்டது. நான் இன்று புதிய வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன். நாட்டில் அறிமுகம் செய்யப்படும் 4-வது வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.
கிராமப்புற சாலைவழி மேம்பாடு, அனைவருக்கும் குடிநீர் வினியோகம் கிடைக்க செய்தல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முன்னேற்றத்துடன் கூடிய சுகாதாரநலன் சார்ந்த வசதிகள் ஆகியவை அரசின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஆகும். புதிய இந்தியாவானது, கடந்த கால சவால்களை மேற்கொண்டு கடந்து, விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இமாசலப்பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.