29.5 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதல்வரின் தனிச்செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தனிச்செயலாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக எம். எல் .ஏக்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்றைய தினத்தில் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலை ரூ. 3 குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குதல், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் பொதுமக்களின் கட்டணத்தை அரசே ஏற்கும், நாளை முதல் மகளிருக்குப் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படாது போன்ற முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் தனிச்செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளைத் தமிழ அரசு நியமித்துள்ளது. உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading