தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிக்கு அனுமதி வழங்ககோரி நடைபெற்ற போராட்டமும் வழக்கும் கடந்த வந்த பாதையை குறித்து விரிவாக அலசுவோம்.
மே 2014: பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு, காளைப் பந்தயம், காளைச் சண்டை ஆகியவற்றை மிருகவதை என்ற பெயரில் தடை செய்தது உச்சநீதிமன்றம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜனவரி 2016: பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
ஜனவரி 2016: பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதால் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
நவம்பர் 2016: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
ஜன. 9, 2017: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.
ஜன. 12 2017: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து ஜல்லிக்கட்டுக்கு தடை தொடரும் என அறிவித்தது.
ஜன. 16, 2017: ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கிராம மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
ஜன. 17. 2017: ஜல்லிக்கட்டு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்.
ஜன. 19, 2017: மெரினா புரட்சி என அழைக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவளித்தனர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
ஜன., 21, 2017: மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றியது.
ஜன., 22, 2017: தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுகள் நடைபெற்றன. ஜல்லிகட்டிற்கு அனுமதி வழங்கும் நிரந்தர சட்டத்தை நிறைவேற்றக்கோரி பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்காமலே சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜன. 23, 2017: சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வன்முறை – ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
ஜன., 24, 2017: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைமையை கண்காணித்து வருவதாக மோடி அரசு அறிவித்தது
மே 18,2023: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு