தமிழ்நாட்டில் காலை 11 மணி வரை 24.37 சதவீதம் வாக்கு பதிவாகின.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் காலை 11 மணி வரை 23.72 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 29.24% பதிவாகி உள்ளன. தொகுதிவாரியாக வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:
தொகுதி சதவீதம்
- கள்ளக்குறிச்சி – 26.58%
- திண்டுக்கல் 26.34%
- நாமக்கல் 26.07%
- கரூர் – 26.07%
- சேலம் – 25.97%
- விழுப்புரம் 25.69%
- தருமபுரி – 25.66%
- பெரம்பலூர் 25.62%
- ஆரணி – 25.53%
- திருப்பூர் 25.47%
- விருதுநகர் – 25.39%
- ஈரோடு – 25.37%
- சிதம்பரம் – 25.35%
- பொள்ளாச்சி 25.02%
- தேனி – 24.99%
- தஞ்சாவூர் 24.96%
- திருவள்ளூர் 24.93%
- திருவண்ணாமலை 24.92%
- நாகை – 24.92%
- கிருஷ்ணகிரி – 24.82%
- மயிலாடுதுறை – 24.76%
- அரக்கோணம் 24.71%
- திருச்சி 24.7%
- கன்னியாகுமரி – 24.68%
- வேலூர் – 24.67%
- கடலூர் 24.66%
- காஞ்சிபுரம் 24.65%
- கோயம்புத்தூர் – 24.54%
- தென்காசி 24.51%
- சிவகங்கை – 24.47%
- தூத்துக்குடி 24.16%
- நீலகிரி – 24%
- ராமநாதபுரம் – 23.89%
- திருநெல்வேலி 23.78%
- ஸ்ரீபெரும்புதூர் – 23.53%
- மதுரை – 22.73%
- வடசென்னை 22.05%
- மத்திய சென்னை – 20.09%
- தென்சென்னை 21.97%
மொத்தம் – 24.37%