தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய நிதியமைச்சர், வருவாய் துறையில் வருவாயைப் பெருக்கவும், சீரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இதற்கு இரண்டு IRS அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறிய அமைச்சர், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிபுணர் குழு சேவை மனப்பான்மையுடன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் செயலாற்றி வருவதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, அரசின் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, அவ்வப்போது உரிய அறிவுரைகளை நிபுணர் குழு வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்களுக்கு, இதுவரை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கப் பெறாததால் அரசாணை வெளியிட்டு செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், இது எந்த வகையிலான ஜனநாயகம் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார். மேலும், வணிக வாகனங்களுக்கான வரி சீர்திருத்ததை செயல்படுத்த வேண்டும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.