தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று சிறிது சிறிதாக பரவத் துவங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா
மருத்துவக் கல்லூரியில் ART மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு
அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார்.
இதில், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக துவங்கி இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் 41% வரை தொற்று கூடி இருக்கிறது. நேற்று ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி பயிற்சி மையத்தில் 29 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை ஐஐடி அண்ணா பல்கலைக்கழகம் சத்யசாய், விஐடி போன்ற நிறுவனங்களில் தொற்று ஏற்பட்டு தற்போது படிப்படியாகக் குறைந்து சகஜ நிலைக்கு வந்துள்ளது. புதிய தொற்றுகள் குடியிருப்பு பகுதிகளிலேயே பரவத்
துவங்கி உள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை 17 மாவட்டங்களில் சிறிது சிறிதாக தொற்று பரவத்
துவங்கி உள்ளது. இதற்கு முன்னால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு
உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பெரிதளவிலான பாதிப்பு இருந்த நிலைமாறி 17 மாவட்டங்களில் ஒன்றிரண்டு என 150 வரை வந்துள்ளது.
இதைத் தடுப்பதற்கு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கும்,
சுகாதார செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதார். அதில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் கருமுட்டை விவகாரம் குறித்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு, சேலம் மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு
மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வு அறிக்கையை விரைந்து அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றார்.
-ம.பவித்ரா