இந்திய கிரிக்கெட் அணி கேப்டம் விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் ,டி20, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வி அடைந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு விராட் கோலியின் கேப்டன்ஷியே காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இது தொடர்பாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர், விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது எவ்வளவு முக்கியத்துவம். அப்படித் தொடக்கத்திலேயே வீழ்த்தினால்தான் வலிமையான ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையைத் தடுக்க முடியும். ஆனால், பும்ரா போன்ற முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கு 2 ஓவரோடு தொடக்கத்திலேயே நிறுத்துவது எப்படிச் சரியாகும்? பொதுவாக ஒருநாள் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளருக்கு முதலில் 4 ஓவர்கள், அதன்பின் 3 ஓவர்கள், கடைசியில் 3 ஓவர்கள் எனப் பிரித்து வழங்குவார்கள். முதல் 10 ஓவர்களில் 4 ஓவர்களையாவது பும்ராவுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், பும்ராவுக்கு 2 ஓவரோடு நிறுத்திவிட்டால், எவ்வாறு ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்? கோலி என்ன மாதிரி கேப்டன்ஷிப் செய்கிறார் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.