புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த அவர், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கண்டுபிடித்து புத்தாண்டை கொண்டாடலாம் எனவும் கடற்கரைகளில் புத்தாண்டை கொண்டாட எந்த தடையுமில்லை எனவும் தெரிவித்தார்
மேலும் கிறிஸ்துமஸ் விழாக்கள் மற்றும் இரவு பிரார்த்தனை வழக்கம் போல் நடைபெறும் எனவும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.







