தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்த பாலாறு பகுதி,ஈசூர், நீலமங்கலம் மற்றும் வெண்ணாங்குபட்டு பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நீலமங்கலம் என்ற இடத்தில் கிளியாறு குறுக்கே , ஒன்பது கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்திடுவோம், எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.