என்எல்சி விவகாரத்தில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் தயாரித்துள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என். எல். சி. நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அனல்மின் நிலைய மற்றும் சுரங்கச் செயல்பாடுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் ஆய்வறிக்கையை வெளியிடப்பட்டது.
இதில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது வேல்முருகன் பேசியதாவது:
“கடலூர் மாவட்டம் பெரும் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது, அண்டை மாவட்டங்களுக்கும் காற்றின் மூலம் மாசு பரவுகிறது, நெய்வேலியை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது, 250 சதவீதத்திற்கு மேல் பாதரசம் கலக்கப்படுகிறது, மக்களுக்கு மாசு படாத காற்று கிடைக்க வேண்டும். ஆனால் என்எல்சி நிறுவனத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இயற்கைக்கு நேர் மாறான நிலையில் தான் உள்ளது, விவசாயிகள் யாரும் போராட்டம் செய்யக்கூடாது, மீறி போராட்டம் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் கூறுகிறது, செப்டம்பர் மாதத்திற்குள் அறுவடை முடித்துவிட்டு நிலத்தை காலி செய்ய வேண்டும் என கூறுகிறது, ஒரு நீதிபதி பயிரை அழிப்பதைக் கண்டு கண்ணீர் வடித்ததாக கூறினார், மற்றொரு நீதிபதி இடத்தை காலி செய்யுங்கள்” என்று கூறுகிறார் என தெரிவித்தார்.
என்எல்சி எதிராக கூட்டணியில் இருந்து விலகி இருக்கலாம் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநமா செய்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்றால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என வேல்முருகன் கூறினார்.