ஆன்லைனில் நடைபெற்றுவரும் செஸபிள் மாஸ்டர்ஸ் போட்டியில் தமிழக இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா (16), அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
அரையிறுதியில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரியை அவர் எதிர்கொள்ளவுள்ளார். மற்றொரு அரையிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னஸ் கார்ல்சென், சீனாவின் டிங் லைரென்னை சந்திக்கவுள்ளார். முன்னதாக, காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சீனாவின் வெய் யீயை 2.5-1.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அனீஷ் கிரி, நார்வே வீரர் ஆர்யன் டோரியையும், கார்ல்சென் டேவிட் ஆன்டன் குஜ்ஜாரோவையும் முறையே 2.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர். சீனாவின் டிங் லைரெனை 2.5-1.5 என்ற கணக்கில் அசர்பைஜான் வீரர் ஷக்ரியார் மமேத்யாரோவை காலிறுதியில் வீழ்த்தினார். உலக சாம்பியன் கார்ல்சென்னை சமீபத்தில் இரண்டாவது முறையாக பிரக்ஞானந்தா வீழ்த்தி செஸ் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது நினைவுகூரத்தக்கது.