யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டெல்லி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று இரவு 9 மணி நிலவரப்படி யமுனையின் நீர்மட்டம் 206 புள்ளி 42 மீட்டரை எட்டியது. வெள்ளப்பெருக்கு காரணமாக டெல்லியில் தாழ்வான பகுதிகளில் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஹிண்டன் ஆற்றில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா, காசியாபாத் நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.