உலகக்கோப்பை இறுதிப்போட்டி | தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் – தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை யொட்டி,  தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. 13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இத்தொடரில்,…

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை யொட்டி,  தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

தோல்வியே காணாமல் 10 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிய இந்திய அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த தொடரில், 8 ஆட்டங்களில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் பலப்பரிட்சை நடத்த தயாராகியுள்ளது.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை யொட்டி,  தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. ரசிகர்கள் எவ்வித இடையூறும் இன்றி போட்டியை கண்டுரசிக்கும் வகையில், இன்று தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.