பொன்விழா ஆண்டையொட்டி, சென்னை முதல் கன்னியாகுமாரி வரை நடைபெறும் பெண் காவலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் வரவேற்பு அளித்தார்.
தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை பெண் காவலர்கள் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் வந்தடைந்த சைக்கிள் பேரணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் வரவேற்றார். அப்போது அவர்களை பாராட்டும் வகையில் அவர்களுடன் அவர் சைக்கிளை ஓட்டி சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமயபுரம் அருகே தனியார் கல்லுாரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. திருச்சி மாவட்ட காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் சிறப்புரையாற்றிய பின் பெண் காவலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இனிப்புகளை கொடுத்தார்.
—அனகா காளமேகன்