சனாதனத்தை ஒழிக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் இல்ல விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சனாதானத்தை ஒழிக்க திராவிட முன்னேற்ற கழகம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ஜெயலலிதா கூட சனாதானத்தை
ஒழிக்க ஆதி திராவிட, பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளுக்கு பதவி வழங்கி முயற்சி
மேற்கொண்டனர். ஆனால் திமுக அதுபோல் முயற்சி மேற்கொண்டதா? சனாதானம் என்பது பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பிரிப்பது. உதயநிதி ஸ்டாலின் சொன்னதுபோல் சனாதானம் என்பது ஒரு கிருமிதான். திமுக என்பதே சனாதான கட்சிதான். சனாதானத்தில் திளைத்து ஊறிய கட்சி திமுக.
இந்தியா கூட்டனியில் உள்ளவர்கள் யாரும் செல்லாதபோது தமிழக
முதல்வர் மட்டும் ஏன் ஜி.20 மாநாட்டிற்கு சென்றார்? மகன் சனாதானத்தை
எதிர்ப்பார் தந்தை சென்று மோடியிடம் சமாதானம் செய்வீர்கள் இதுதானே நடக்கிறது. சனாதானத்தின் தலைவரே மோடிதான் அவருடன் ஏன் சென்று நிர்க்கிறீர்கள்?
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜனநாயம் இல்லாத இந்தியாவாக மாறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்கிறார். ஜனநாயகத்தை அழிப்பதின் தொடக்கமே காங்கிரஸ்தான். அதற்கு நான் தான் உதாரணம். அவர் உள் துறை அமைச்சராக இருக்கும்போதுதான் என்னை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
உள்துறை அமைச்சராக இருக்கும்போது அமித்ஷாவை கைது செய்தீர்கள் இன்று அவர் உள்துறை அமைச்சராக இருக்கும்போது அவர் உங்களை(ப.சிதம்பரத்தை) கைது செய்தார். இருவரும் மாறி, மாறி ஜனநாயகத்தை கொன்றுவிட்டு தற்சமயம் ஜனநாயகத்தை பற்றி பேச ப.சிதம்பரத்திற்கு என்ன தகுதியுள்ளது?
மேலும் பாரத் என மோடி மாற்ற முயற்சிப்பது குறித்த் கேள்விக்கு வெள்ளைக்காரன்
கொண்டுவந்த ஒவ்வொன்றாக மாற்றுவதாக கூறி இந்தியா பெயரை மாற்ற
முயற்சிக்கிறீர்கள் சரி என வைத்துக்கொள்வோம் அதே வெள்ளைக்காரன் கொண்டுவந்த இந்துமதம் என்கிற பெயரை ஏன் மாற்றவில்லை?
இதனை தொடர்ந்து முதல்வரின் எக்ஸ் தள பதிவு குறித்த கேள்விக்கு இறை நம்பிக்கையுள்ள ஆட்சியை நடத்துபவர்கள் தீபாவளிக்கும், விநாயகர் சதூர்த்திக்கும் ஏன் வாழ்த்து சொல்வதில்லை? புதிய கல்வி கொள்கை மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற ஆளுநரின் கருத்து குறித்தகேள்விக்கு புதிய கல்வி கொள்கை என்பது நமது குழந்தைகளுக்கு எழுதிவைக்க கூடிய மரண சாசனம். நாம் பாடுபட்டு பெற்ற குலக்கல்வி ஒழிப்பை மீண்டும் கொண்டு வருவதே புதிய கல்வி கொள்கை. இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் கூறினார்.







