இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடப்பாண்டு முதல், வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
OTT இயங்குதளங்கள், மாறுபட்ட மற்றும் பல வகையான திரைப்படங்கள் மற்றும் தொடர்களைப் பார்ப்பதற்கு மிகவும் விருப்பமான ஒரு கேளிக்கை தளங்களாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த தளங்களில் மக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்க அனுமதிக்கிறது.
இந்தியா பல்வேறு அரிய திறமைகளால் நிரம்பியுள்ளது. முன்னேற்றமே குறிக்கோளாய், பல கோடி கனவுகள் மற்றும் சொல்லப்படாத கதைகளுடன் உலகை வழிநடத்த தயாராக உள்ள புதிய இந்தியாவின் கதையை இயக்குநா்கள் சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இந்தியாவின் ‘ஓ.டி.டி.’ துறையில் முதலீட்டை வாயப்பை உருவாக்குதல், இந்திய மொழிப் படங்கள், அதன் அரிய திறமைகளை அங்கீகரித்தல் என ‘ஓ.டி.டி.’ துறையின் வளா்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தலை இந்த விருது நோக்கமாகக் கொண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.








