“தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது,

“தமிழர் திருநாளான பொங்கலை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம். கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எனர்ஜி வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீத பணிகள் மீதம் இருக்கிறது. இன்று பாஜகவில் இருக்கிறவர்கள் கூட, திமுகவினரை போல யாராலும் வேலை செய்ய முடியாது என கூறுகிறார்கள்.

50 சதவீத தேர்தல் பணிகளை நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவீத தேர்தல் பணிகள்தான் நிலுவையில் உள்ளது. நாம் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று நான் ஏற்கெனவே கூறி இருந்தேன். ஆனால், நீங்கள் ஆற்றும் பணிகளை பார்க்கும்போது, 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு தோன்றுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்போம்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.