மணிப்பூரில் செல்போன் இணையதள சேவைகள் 5 நாள்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்தே சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் இன்னும் தொடர்கிறது. மணிப்பூரில் இணைய சேவையை மீட்டெடுத்த 2 நாட்களில், மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளது. ஜூலை 6ஆம் திகதி முதல் காணாமல் போன இரண்டு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மணிப்பூரில் அக்டோபர் 1ம் தேதி இரவு 7:45 மணி வரை ஐந்து நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் டேட்டா சேவைகள் மற்றும் இணையதள சேவைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை இம்பாலில் இரண்டு மெய்டே மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வைரலானதை அடுத்து பரவலான சீற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவையை தற்காலிகமாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது.
மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகத் தளங்கள் மூலம் தவறான தகவல்கள், பொய்யான வதந்திகள் மற்றும் பிற வன்முறைச் செயல்கள் பரவுவதை மாநில அரசு தடுக்கும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஒவ்வொரு செயலையும் அரசு கண்காணித்து வருகிறது.