முக்கியச் செய்திகள் உலகம்

வாஜ்பாய் நினைவு தினம்; பிரதமர், குடியரசு தலைவர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும் பாஜகவை நிறுவியவர்களில் முக்கியவருமான வாஜ்பாயின் 2-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாஜ்பாயின் மகள் நமிதா கவுல் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவுதினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மரியாதைக்குரிய அடல்ஜிக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்காக வாஜ்பாய் ஆற்றிய சேவைகளையும் முயற்சிகளையும் நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுகவின் 100 நாட்கள் சாதனை குறித்து அண்ணாமலை விமர்சனம்

G SaravanaKumar

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் -அமைச்சர் பி.கே.சேகர்பாபு

EZHILARASAN D

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலை

Arivazhagan Chinnasamy