அம்பேத்கர் அளித்துள்ள சட்டத்தின் ஒரு அங்கம் தான் பொது சிவில் சட்டம் என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். திருமண விழாவில் அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, சாபம் விடுவது தான் திராவிட மாடலா?குடும்ப ஆட்சி நடக்கவில்லை என கூறுங்கள்.? உங்கள் மகனாக இருப்பதால் விளையாட்டு துறை அமைச்சருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாஜக-வை குறைகூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அம்பேத்கர் கொடுத்துள்ள சட்டத்தின் ஒரு அங்கம் தான் பொது சிவில் சட்டம். அம்பேத்கர் கூறிய பொது சிவில் சட்டம் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் என முதலமைச்சர் கூறுகிறாரா? அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்ற கருத்தை மோடி வெளிப்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது.
சமூக நீதி மாநிலம், பெரியார் மண் என்று சொல்லகூடிய இந்த மாநிலத்தில் ஏன் மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை ? திமுக பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்படுகின்ற இயக்கமாக உள்ளது. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொன்னது உண்டா?
திமுக தலைவராக அல்ல, முதல்வராக ஏன் வாழ்த்து சொல்லவில்லை. நான் அதிகமாக சினிமா பார்க்க மாட்டேன். படத்தில் நடிக்கும் உதயநிதி வெளியிலும் நடிக்கிறார். சிதம்பரம் கோவிலை தமிழக அரசு கௌரவ பிரச்னையாக பார்க்கிறது
இதை கௌரவ பிரச்சனையாக பார்க்காமல் மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும்” என வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.