கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சிஎஸ்ஐ பேராயத்திற்கு சொந்தமான காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நான்கு இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சிஎஸ்ஐ பேராயத்திற்கு சொந்தமான காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மாணவ மாணவிகள் வெள்ளறடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், கல்லூரியில் சேர்ப்பதாகக் கூறி மாணவ மாணவியரிடம் இருந்து பிஷப் தர்ம ராஜ் ரசலாம் தலைமையில் ஒரு குழு பல கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு வெள்ளை பேப்பரில் கையெழுத்தும் வாங்கியுள்ளனர். மேலும், நிர்வாகம் வாங்கியதாகக் கூறிய அந்த குழு, கல்லூரியில் இடம் வழங்காத நிலையில், இதில் பிஷப்-க்கு தொடர்பு இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்து மாணவ மாணவிகள் உயர் நீதி மன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘‘ஓபிஎஸ்-ஐ வைத்து அதிமுகவை உடைக்கலாம் என நினைக்க வேண்டாம்’ – சி.வி.சண்முகம் எம்.பி’
இந்நிலையில், திருவனந்தபுரத்திலுள்ள எல்.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பிஷப் தலைமை அலுவலகம், கரக்கோணம் மருத்துவக் கல்லூரி, நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள முன்னாள் நிர்வாகி இல்லம், செறியக் கொல்லா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகி இல்லம் என நான்கு இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே பல கோடி ரூபாய் முறைகேடு புகார் தொடர்பாக, பிஷப் உட்பட நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ள இருமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.