25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

ரயில் விபத்து நடந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம் -அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகளுடன் அந்த பகுதியிலேயே தங்கியிருந்து சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், நேற்றிரவு இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடட்ம பேசிய அவர், விபத்துக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ரயில் விபத்தை சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை விரைவில் கண்டுபிடிப்பதே தங்கள் குறிக்கோள் என்றும், தங்கள் பொறுப்பு இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

உலகக்கோப்பை போட்டியில் திடீர் திருப்பம் : அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

EZHILARASAN D

வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல்

EZHILARASAN D

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley Karthik