சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.எம்.ரவி உரையாற்றினார். இதையடுத்து 2ம் நாளான இன்று தொடங்கிய கூட்டத்தில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா, இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது, பிரபல கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவு உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்விநேரம் சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக வலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் நேரடியாக அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பாமக வரவேற்கிறது என தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவை ஆண்டுக்கு 4 முறை மொத்தம் குறைந்தது 100 நாட்கள் நடைபெற வேண்டும்; அவை நடவடிக்கைகள் முழுமையாக நேரடியாக ஒளிபரப்பட வேண்டும் என்று முதன்முதலில் வாக்குறுதி அளித்ததும், வலியுறுத்தியதும் பாமக தான். அந்த வகையில் கேள்வி நேர நேரலை மகிழ்ச்சியளிக்கிறது என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யவும், அதற்காக தனித் தொலைக்காட்சி தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா அச்சம் விலகிய பிறகு பேரவையை ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக வலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் நேரடியாக அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பா.ம.க. வரவேற்கிறது!(1/3)#LiveTelecast #TNAssembly
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 6, 2022