கன்னியாகுமரி , சிலோன் காலனி பகுதியில் புலியிடமிருந்து தங்களது
பாதுகாப்பை உறுதிபடுத்தும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்கள் நுற்றுக்கக்கானோர் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, சிற்றார் அருகே சிலோன் காலனி பகுதியில் சுமார் 50
ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான தோட்ட தொழிலர்கள் குடும்பத்துடன் தங்கி அரசு ரப்பர் கழகத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புலி நடமாட்டம் உள்ளதாக தோட்ட தொழிலர்கள் சிலர் கூறி வந்த நிலையில்,
இரு தினங்களுக்கு முன் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்றை கடித்து தூக்கி
சென்றது. நேற்றைய தினம் மாடு ஒன்றையும் கடித்து சென்றது பின் மாட்டினை மீட்ட தோட்ட தொழிலார்கள் கால்நடை மருத்துவர் மூலம் மாட்டிற்கு சிகிச்சை அளித்தனர். புலியின் நடமாட்டம் நாளுக்கு அதிகமாவதால் தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து புலியை பிடித்து பாதுகாப்பை உறுதி படுத்தும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என அரசு ரப்பர் கழக தோட்ட நூற்றுக்கக்கான தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.